articles

img

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர் போராட்டம்

தொழிற்சங்கம் தொடங்கி யதற்காக  சென்னை மெட் ரோ ரயில் நிர்வாகத்தால் 2019ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட சங்கத்தின் 4 முதன்மை நிர்வாகிகள் சுமார் 4  ஆண்டுகளுக்குப் பின்  சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில்  50விழுக்காடு பின் சம்பளம் மற்றும் பணி தொடர்ச்சியுடன் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

தனியார்மயத்திற்கு எதிராக  உருவான சங்கம்

சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் தனியார்மயம் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான பாரபட்ச செயல்களுக்கு எதிராக, கடந்த 2018-இல் சென்னை மெட்ரோ ரயில் எம்ப்ளாயீஸ் யூனியன் (சிஎம்ஆர்இ யூ) உருவாக்கப்பட்டது. அந்த சங்கத்தை ஒழிக்க நினைத்த நிர்வாகம் சங்க முன்னணி நிர்வாகி கள் 7 பேரை, லெட்டர் பேடில் பெயர் இருந்த தாகக் கூறி, கடந்த 2019-இல் கூண்டோடு பணி நீக்கம் செய்தது. இதற்கு எதிராக வெகுண்டெ ழுந்த ஊழியர்கள் தன்னெழுச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நினைத்த நிர்வாகம், 7 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்குவதாக ஒப்பந்தம் போட்டது. ஆனால் ஒப்பந்தப்படி பணி வழங்காமல், அதற்கு மாறாக, சங்கத்தை மேலும் சிதைக்க நினைத்து, மேற்கொண்டு 10 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது. அத்துடன், அனைத்து உறுப்பினர்களுக்கும் 4 ஆண்டுகள், ஆண்டு ஊதிய வெட்டு போன்ற கடுமையான தண்டனைகளை வழங்கியது.

சட்டப்போராட்டம்

பணிநீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள் எழு வரில், மூவர்  நிர்வாகத்திடம் சரணடைந்த போதும், 4 நிர்வாகிகள் தொடர்ந்து போராடு வதென முடிவெடுத்து, மீண்டும் பணி வழங்கி டக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2020 இல் வழக்கு தொடர்ந்தனர். மேலும், தொழி லாளர் நலன் சார்ந்த, உரிமை சார்ந்த பல்வேறு சட்டப் போராட்டங்களையும்,வழக்குகளையும் தொடுத்தனர். சங்க நிர்வாகிகள், சிஐடியு தலைமையின் வழிகாட்டுதலுடன், பல்வேறு சட்டப் போராட்டங்கள், தொழிலாளர் துறை யில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியது என சங்கத்தின் முயற்சியில் 10 தொழி லாளர்கள் மீண்டும்  பணிக்கு எடுத்துக்கொள்ளப் பட்டனர்.  அத்துடன் ஊதிய வெட்டு தண்ட னைகளும் ரத்து செய்யப்பட்டது.

சங்க பதிவை ரத்துசெய்ய வேண்டுமாம்

20 விழுக்காடு அலவன்ஸ் உள்ளிட்ட  நிர்வாகத்தால் பறிக்கப்பட்ட பல்வேறு  உரிமைகளை சங்கத்தின் வாயிலாக தொழி லாளர்கள் மீண்டும் பெற்றனர். Standing orders, Subsistence allowance உள்ளிட்ட  பல்வேறு வழக்குகளிலும் வெற்றிபெற்றனர். மேலும், தொழிற்சங்கம் மூலம் நிர்வாகத்தின் நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத்தலை வர் ஆகியோருக்கு எதிராக சிவில் நீதி மன்றத்தில் நிர்வாகம் பெற்ற உத்தரவை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து முறியடித்தனர். எங்கும் இல்லாத வகையில் சங்கத்தின் பதிவை ரத்து செய்யக் கோரி தொழிற்சங்கப் பதிவாளரிடம் நிர்வாகம் அளித்த புகாரையும் சட்ட ரீதியாக வெற்றி கொண்டனர்.

சங்கத் தலைவர்களை  பாதுகாத்த ஊழியர்கள்

தற்போது எல்லாவற்றுக்கும் மேலாக, மாபெரும் வெற்றியாக, சென்னை உயர்நீதி மன்ற ஆணை வாயிலாக, பணி நீக்கம் செய்யப்பட்ட முதன்மை நிர்வாகிகள் 4 பேரும்-  50விழுக்காடு பின் சம்பளம் மற்றும் பணி தொடர்ச்சியுடன் மீண்டும் வெற்றிகரமாக பணிக்குத் திரும்பியுள்ளனர்.  இது தொழிற்சங்க  வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படு கிறது. எந்நிலை வந்தாலும், சங்கத்தை காப்பாற்றிட நினைத்த சென்னை மெட்ரோ ரயில் எம்ப்ளாயிஸ் சங்க தோழர்கள், நிர்வா கத்தால் பழிவாங்கப்பட்ட நிர்வாகிகளுக்கு  நபர் ஒன்றுக்கு மாதம் சுமார் 1ஆயிரம்  முதல் 2ஆயிரம் வரை வசூலித்து, தொடர்ந்து  58 மாதங்கள், அவர்களுக்கு இழப்பீடு வழங்கி, இன்று சங்கத்தையும் காப்பாற்றி நிர்வாகிகளையும் காப்பாற்றியுள்ளனர்.

இந்நிலையில்  சமீபத்தில் நடைபெற்ற சென்னை மெட்ரோ ரயில் ஊழியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்திற்கு  சிஐ டியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன்  தலைமைதாங்கினார். துணைத்தலைவர்கள் ஆர்.இளங்கோவன்,  ஆறுமுக நயினார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன்,  தென் சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், டி.ஆர்.இ.யு துணைத்தலைவர்  பேபி ஷகிலா, வழக்குரைஞர் வீ.அஜாய் கோஷ்  ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தொழிற்சங்க நடவடிக்கை காரண மாக பணி நீக்கம் செய்யப்பட்டு, 4 ஆண்டு களுக்குப் பின்னர் வழக்கில் வெற்றி பெற்று  மீண்டும் பணிக்கு திரும்பிய சங்க நிர்வாகி களுக்கு கூட்டத்தில் பாராட்டுக்கள் தெரி விக்கப்பட்டது.  இந்த மகத்தான போராட்ட த்தை தலைமையேற்று நடத்திய தலைவர் அ. சவுந்தரராசன், துணைத்தலைவர்கள் ஆர்.இளங்கோவன், ஆறுமுக நயினார்  ஆகியோருக்கும் வழிகாட்டிய சிஐடியு தமிழ்  மாநிலக் குழுவுக்கும், வழக்காடிய மூத்த வழக்கறிஞர் வைகை, வழக்கறிஞர்  அஜாய் கோஷ் ஆகியோருக்கும்  மாநிலம் முழு வதும் பல்வேறு காலகட்டங்களில் போராட்ட  இயக்கங்கள் நடத்தி ஆதரவளித்த மாவட்டக் குழுக்களுக்கும், தோழமைச் சங்கங்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுச் செயல்படுத்திய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கும், சுமூக பேச்சுவார்த்தை மூலம் பல்வேறு பிரச்சனைகளில் தீர்வு காணச் செய்த தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறைக்கும்நன்றி தெரிவிக்கப்பட்டது. பணியில் சேர்ந்த  சங்க நிர்வாகிகள்  சார்பில்,  நிர்மல் பள்ளி நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

நிர்வாகிகள் தேர்வு

பொதுக்குழுவில் சங்கத்தின்   தலைவராக மீண்டும் அ.சவுந்தரராசன் துணைத் தலை வர்களாக  ஆர்.இளங்கோவன், எம். ஆறுமுக  நயினார், செயல் தலைவராக ஆ.பர மேஸ்வரன், பொதுச் செயலாளராக செந்தில்  குமார், பொருளாளராக  சுகுமார், துணைத் தலைவராக  நதியா, இணைச்செய லாளர்களாக  அரவிந்தன், இராமராஜன், சுரேஷ் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட  17 பேர் கொண்ட நிர்வாகக்குழு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் தொழிற்சங்கத்தினரின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டமும் அவர்கள் அடைந்துள்ள வெற்றியும், “ஒரு தொழி லாளியின் காயம் அனைத்துத் தொழிலாளி களின் காயம்” என்பதற்கேற்ப பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இறுதி வரை பக்கபல மாக நின்ற அந்த ஒற்றுமை உணர்வும், முழுமையான ஜனநாயக முறையில் தொழிற்சங்கத் தேர்தலை நடத்தி சங்கத்தை நடத்திடும் பாங்கும் வருங்கால தொழிற்சங்கங்களுக்கும் ஒரு முன்மாதிரி என்று சொன்னால் அது மிகையல்ல.